/indian-express-tamil/media/media_files/K075ufXhxgB1CvRhiLgz.jpg)
முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
Ponmudi | Supreme Court Of India | சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் எனவும் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஜனவரியில் தீர்ப்பளித்தது.
2006-11-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
வழக்கில் இருவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் 2017-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்-ம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
இதனால் பொன்முடி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இந்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம், “சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.
தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதால் அவர் மீண்டும் எல்.எல்.ஏ ஆக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி எம்.பி.யின் கடந்த கால வழக்கை இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.