Advertisment

4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் டிச.17 இயங்கும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (டிச.17) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
RATION CARD.jpg

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் டிச.17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ration-card | chennai-rain | tamil-nadu | மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை டிச.17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட உள்ளது. இதையடுத்து. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (டிச.17) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் முதல் வாரத்தில் வீசிய மிக்ஜாம் புயல் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்பட உள்ளது.

இதற்காக டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (டிச.17) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிவாரண உதவித் தொகை வழங்குவதற்கான அரசாணை செவ்வாய்க்கிழமை (டிச.13) வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ration Card Chennai Rain Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment