கோகுல் ராஜ் கொலை வழக்கு: ஜூன் 2ஆம் தேதி தீர்ப்பு!

கோகுல் ராஜ் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன்2) தீர்ப்பு வழங்குகிறது.

கோகுல் ராஜ் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன்2) தீர்ப்பு வழங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
The verdict in the Gokul Raj murder case against Yuvraj will be delivered on June 2

கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜின் ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான கோகுல்ராஜ், 2015ஆம் ஆண்டு நாமக்கல்லில் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.

Advertisment

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவர், கல்லூரியில் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியை காதலித்துள்ளார். இதை ஏற்கமுடியாத சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர், திட்டமிட்டு ஆணவக்கொலை செய்து, கோகுல்ராஜ் உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

இதில் 2 பேர் இறந்த நிலையில், ஏனைய 15 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து நிலையில், பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் 4 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) தீர்ப்பு வழங்குகிறது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Salem Gokul

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: