தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக வழக்கத்திற்கு மாறாக கொளுத்திய வெயிலால் மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலையும் நிலவியது.
இந்த வெயிலின் தாக்கத்தை போக்கும் விதமாக இளநீர் பானம், பழம், மோர் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அதிகம் விற்பனையாகி வந்தன.
இதனிடையே இன்று கோவையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் மப்பும் மந்தாரமாக காணப்பட்டிருந்தது. தொடர்ந்து, மாலையில் சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி கனமழை பெய்தது.
இந்த மழை கோவை மாநகர பகுதியான லட்சுமி மில், காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், சாய்பாபா காலனி, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் பெய்தது.
இந்த திடீர் மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
கடந்த சில நாள்களாக வழக்கத்திற்கு மாறாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“