விடிய விடிய கொட்டித் தீர்க்கும் மழை: இந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

வடகிழக்குப் பருவமழை இன்று (அக்.16) தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் மூன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை இன்று (அக்.16) தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் மூன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
school students rain

இன்று (அக்டோபர் 16) முதல் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து, மாநிலத்தின் பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று (அக்.16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

கனமழைக்கு வாய்ப்பு; 3 மாவட்டங்களில் பள்ளி விடுமுறை:

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட மொத்தம் 22 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில்மழைநிலவரத்திற்குஏற்பபள்ளிகளுக்குவிடுமுறைவிடதலைமைஆசிரியர்களுக்குஅனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. மிகக் கனமழை எச்சரிக்கையின் காரணமாக, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று (அக்.16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

வடகிழக்குப் பருவமழை தொடக்கம் மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி:

தமிழகத்திற்கு அதிக மழையைப் பெற்றுத்தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக, வரும் 19-ஆம் தேதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரளா - கர்நாடகா பகுதியை ஒட்டி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

tamilnadu rain rain

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: