கோவையில் கல்லூரி மாணவர் மரணம்: அரசு மருத்துவமனையை ஸ்தம்பிக்க வைத்த சக மாணவர்கள்

கோவை அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் உயிரிழந்துள்ளதாக கல்லூரியைச் சேர்ந்த சக மாணவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் உயிரிழந்துள்ளதாக கல்லூரியைச் சேர்ந்த சக மாணவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
TN

திருநெல்வேலியைச் சேர்ந்த வசந்த் (19) என்பவர் கடந்த 8-ஆம்  தேதி மதியம் மூன்று மணியளவில் சுங்கம் அருகே சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக படுகாயமடைந்த வசந்திற்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறித்த தகவலை மருத்துவர்களும், செவியிலர்களும் முறையாக தெரிவிக்கவில்லை என மாணவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். 

Advertisment

மேலும் சரியான சிகிச்சை கொடுக்காத காரணத்தினால் மாணவர் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல்,  மருத்துவமனையில் பணம் கேட்டு தொல்லை செய்வதாகவும் ஒவ்வொரு பொருளையும் வெளியே இருந்து வாங்கி வருவதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து, ஆத்திரமடைந்த சக கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.

மாணவர்கள் திரண்டதை அடுத்து பந்தய சாலை போலீசார் உடனடியாக மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் உயிரிழப்பு குறித்து சரியான காரணத்தை மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் கலைந்து செல்ல மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements
Tamilnadu Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: