/tamil-ie/media/media_files/uploads/2020/01/thiruma-hc.jpg)
thirumavalavan election case, vck president thirumavalavan,vck,திருமாவளவன், விசிக, தேர்தல் வழக்கு, kattumannarkovil, சென்னை உயர் நீதிமன்றம், madras high court, high court order send summon to election officer, thirumavalavan
விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்த தேர்தல் வழக்கில், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் நிராகரிக்கபட்ட 102 தபால் வாக்குகளுடன் ஜனவரி 20-ல் நேரில் ஆஜராகும்படி அத்தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு சம்மன் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முருகுமாறன் வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 102 தபால் வாக்குகள் நிராகரிக்கபட்டுள்ளதாகவும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் மனுதரார் தோல்வியடைந்ததாக தெரிவிக்கபட்டது.
இந்த தொகுதியின் தேர்தல் அதிகாரி முத்துக்குமாரசுவாமியை சாட்சியாக விசாரிக்கும் போது நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை சமர்பிக்கும் படி மனுதாரரோ, எதிர் மனுதாரரோ கோரவில்லை என குறிப்பிட்ட நீதிபதி இந்த வழக்கில் தீர்பளிக்கும் முன் நிராகரிக்கப்பட்ட 102 தாபல் வாக்குகளை ஆய்வு செய்யவேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அதனால், காட்டுமன்னார்கோயிலில் தேர்தல் அதிகாரியாக இருந்த முத்துகுமாரசுவாமி நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் ஜனவரி 20 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.