தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது : ”தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு மட்டும் உடனடியாக தேர்தல் சின்னத்தை வழங்குகிறது தேர்தல் ஆணையம். எதிர் கூட்டணியில் இருப்பவர்களுக்கு தேர்தல் சின்னத்தை ஒதுக்காமல் நிராகரிக்கிறது. தேர்தல் ஆணையமே இவ்வாறு ஒரு தலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியியை சார்ந்து இல்லாமல் தேசிய அளவில் இந்த தேர்தலை நேர்மையுடன் நடத்த வேண்டும். தமிழ்நாட்டை பொருத்தவரையில் பா.ஜ.க பூஜியம் என்று எங்கள் கூட்டணி கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். எனவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன கூறினாலும் எடுபடாது.
அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. எப்போதும் நான் மக்கள் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிற மற்ற நேரத்தில் மக்களுடன் தான் இருக்கிறேன். தொகுதி மக்கள் அதை நன்கு அறிவார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் நான் பங்கேற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் நல்லாதரவுடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படுவேன். தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும், அதில் சிதம்பரமும் ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“