Advertisment

சனாதனத்தை ஒழிக்கும் போராட்டத்தில் திருமா தலைமையை ஏற்கத் தயார்: ப.சிதம்பரம்

கோவை சிவானந்தாகாலனி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மணிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
சனாதனத்தை ஒழிக்கும் போராட்டத்தில் திருமா தலைமையை ஏற்கத் தயார்: ப.சிதம்பரம்

கோவை சிவானந்தாகாலனி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மணிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Advertisment

முன்னதாக நிமிர்வு கலையகம் சார்பில் பறையிசை நடைபெற்றது.பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம்,அமைச்சர் செந்தில் பாலாஜி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா , தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.

வி.சி.க"வினர் திருமாவளவனுக்கு அன்பளிப்பாக தங்க நாணயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்வைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:  

”போராடி அனைத்து தடைகளையும் உடைத்து நாடாளுமன்றத்தில் அரியாசனம் போட்டு அமர்ந்துள்ளார். நூற்றாண்டு காலம் திருமா வாழ வாழ்த்துகிறேன். விசிக கட்சியின் தொண்டர்களுக்கான கோரிக்கை நான் சொல்வது திருமாவின் கொள்கைகளை கடைசி வரை பின்பற்ற வேண்டும்.

publive-image

75 ஆண்டு காலம் சுதந்திரம் தினம் கொண்டாடிகிறோம் ஆனால், முழுமையாக 130 கோடி மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. பல பேர் பேசவும் எழுதவும், போராடாவும் சுதந்திரம் இல்லை. உணவு, இருப்பிடம் போன்றவையிலும் சுதந்திரம் கிடைக்கவில்லை.

பழங்குடியினர், சிறுபான்மையினர் இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. அமெரிக்காவில் கருப்பின மக்கள் 200 ஆண்டுகளுக்கு மேலால போராடி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் விவாதம் நடைபெற்று வருகிறது.  அதை இந்த மோடையில் தவிர்க்க முடியாது. மனுஸ்மிருதி எதிர்பதாக அம்பேத்கர் அடித்து சொன்னார். அமெரிக்கா, லண்டன் உள்ளட்ட உலக அரங்கிலும் உடைத்து சொன்னவர் அம்பேத்கர். இந்தியாவில் இருக்க கூடிய இந்து மதம் பல மாடி கட்டிடம். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னோரு மாடிக்கு போக முடியாது. இதுபோன்ற வேறுபாடு எந்த மதத்திலும் கிடையாது.  இந்தியாவில் இருக்கும் மத பேதங்கள் எந்த நாட்டிலும் இல்லை. இதை உடைத்து எரிய வேண்டிதான் வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் போராடினார். சனாதனத்தை ஆதரிப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும். அவர்கள் நமக்கான சவால். மகாத்மா காந்தி சனாதனத்தை குறித்து பேசியதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அதை அம்பேத்கரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

publive-image

மகாத்மா காந்தி போன்ற ஒரு தலைவர் இல்லை. மனுஸ்மிருதி பற்றிய விவாதம் 80 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அண்ணாமலைக்கும், திமுகா-விற்கு இடையே நடக்கும் விவாதம் மட்டும் இல்லை.எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியான மதிப்பு இன்னும் இந்தியாவில் கிடைக்கவில்லை.

அது கிடைக்கும் வரைக்கும் போராட்டம் தொடரும் என்றார். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி பெரியார் உணவகத்தை எப்படி திறக்கலாம் என கலவரத்தை நடத்தியுள்ளனர். இளைஞர்கள் பலர் காவி கொடியை தூக்கிக்கொண்டு செல்வது அறிந்தேன். உணவகத்தை அடித்து நொறுக்கியதை பார்த்து வேதனை அடைந்தேன்.

சனாதனத்தை ஏற்றுக் கொள்ளும் இளைஞர்கள் பார்த்து பரிதாபப் படுகிறேன். இந்த மண் திராவிடமும், தேசியமும் கலந்த மண். ஆதிக்க உணர்வுகளையும், சக்திகளையும் அழிக்க போராட வேண்டும். காந்தியை மதிக்கிறேன், ஆனால் சனாதன கருத்தை ஒருபோதும் ஏற்க மாட்டேன். ஏற்றத்தாழ்வு கடுமையாக எதிர்க்கிறேன். சாதி ஒழிய வேண்டும். தடையாகவும், சுவராகவும் சாதி உள்ளது. சாதி ஒழிந்தால் தான் சனாதனம் ஒழிக்க முடியும். சனாதனத்தை ஒழிக்கும் போராட்டத்தில் திருமாவின் தலைமையில் செல்ல தயார்”  என்று உரையை முடித்தார்.

publive-image

தொல்.திருமாவளவன் பேசியதவது:

”60 வயதை எட்டியதை அரசியல் கருத்துகளை இணைக்கும் விழாவாக நடத்த திட்டமிட்டோம். கடந்த பிறந்தநாள்கள் எல்லாம் சமூக பிரச்சனையின் கருத்துகளை வைத்து கொண்டாடினோம். மதிப்புக்குரிய சங்கிகள் இந்த கருத்தை கொடுத்துள்ளனர். அதை 60 வது பிறந்தநாளில் கருவாக கொண்டாடி வருகிறோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தனிமைபடுத்துவோம். மண்டல வாரியாக தலைவர்களை அழைத்து கூட்டம் போட்டு வருகிறோம். காந்தியடிகளின் கருத்துகளின் அரசியல் முரண்பாடுகளை துணிச்சலுடன் பேசியவர் சிதம்பரம். காந்தியடிகளை குறைத்து மதிப்பிடவில்லை அவர். தேசத் தந்தை காந்திக்கும், அம்பேத்கருக்கு இடையிலான கருத்தியல் மோதல் இது.

இன்று மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதற்கு நாம் சங்கிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்துக்களின் நம்பிக்கை யாரும் கொச்சைப்படுத்தவில்லை. இந்துகளுக்கு எதிராக திசை திருப்பி வைப்பது மட்டுமின்றி எதிரிகளாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை பயன்படுத்துகிறார்கள்.

இந்து மதத்தை காக்க நினைக்கும் மாடாதிபதிகள் ஆர்.எஸ்.எஸ் , பாஜகவினரை அழைத்து செவில் மீது அறைய வேண்டும். ஆர்.எஸ்.எஸ் , பிஜேபியும் மத வழி தேசியத்தை வடிவமைக்க முயற்சிக்கின்றனர்.

காந்தியை சிறுமைபடுத்தி பார்க்க பட்டேலுக்கு சிலை வைக்கிறார்கள். காந்தியை வணங்குகிறார்கள், கோட்சாவிற்கும் வீர வணக்கம் போடுகிறார்கள்!!  என்னவொரு நடிப்பு. கருத்தியல் ரீதியாக ஒரே எதிரியாக இருப்பவர் அம்பேத்கர் தான். அவர்கள் நினைப்பதை செயல்படுத்த முடியாமல் தடையாக இருப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம். அதை வடிவமைத்தவர் அம்பேத்கர்.இந்தியாவில் இரண்டு இனம் தான். ஒன்று ஆரியன், மற்றொன்று திராவிடன். மோகன் பகவத் சொல்லும் சாதியும் மதமும் மறந்துவிடு என்கிறார். மதமும் , சாதியும் மறந்து விடுவதல்ல வேரோடு அழித்து எரிய வேண்டும்

தமிழிசை அக்காவை , பொன்னார் சங்கர மடத்தில் உட்கார வைக்க முடியுமா?? சாதியும் மதமும் இல்லை என எப்படி சொல்ல முடிகிறது. ஒரே ஒரு நாள் விவசாயிகவும், செருப்பு தைப்பராகவும், மீன் பிடிக்க முடிமா?? என கேள்வி எழுப்பினார். உடல் உழைப்பு இல்லாமல் பருப்பும், நெய்யும் பாதுகாப்பாக சாப்புடுவது எப்படி. என்னை உழைக்க சொல்கிறது சனாதனம்,மோகன் பகவத் கைகளில் கடப்பாரை பார்த்து உள்ளீர்களா??அம்பேத்கரின் பிள்ளை, பெரியாரின் மாணவன் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை தவிர்த்து எதிர்கட்சி அமைப்பது மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வழி வகுக்கும் என பணிவுடன் தெலுங்கானா முதல்வரிடம் கூறி வந்துள்ளேன்.

publive-image

மோடி பாவம் எழுதி கொடுப்பதையும், சொல்லி கொடுப்பதையும் பேசுபவர். தமிழ்நாட்டை குறி வைத்து விட்டார்கள். அண்ணாமலை என்கிற சூத்திர இந்துவை வைத்து வால் ஆட்டுகிறார்கள். எச்.ராஜா என்கிற பிராமணரை வைத்து வால் ஆட்ட முடியவில்லை. பெட்ரோல் குண்டு விசுபவர்கள் இவர்கள் தான், ஆனால்  குற்றத்தை பெரியார் அமைப்புகள் மீது போடுகிறார்கள். 54 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி கேட்கிறார்கள். எதுக்கு விலைவாசி உயர்வை எதிர்த்தா?? தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவா?? என கேள்வி எழுப்பினார்.

இவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் இந்துகளை யார் காப்பாற்றுவார்களா?? அப்பாவி இந்துகளுகாக தான் நாம் குரல் கொடுக்கிறோம். தந்தை பெரியார் பெயரில் உணவகம் வைத்தால் அடிச்சு நொறுக்குறான்.  அவனுக்கு எவ்வளவு நெஞ்சாலுத்தம் .தமிழ்நாட்டில் 200 பேர் தான் இருக்கிறார்கள், பெரியார் மண்ணில் வால் ஆட்டி வருகிறார்கள்.

publive-image

முன்னாள் மத்திய அமைச்சரின் முன்னிலையில் சொல்கிறேன். வாலை சுற்றி வையுங்கள், இல்லாவிட்டால் வால் நறுக்கப்படும். அதிமுக பிஜேபியுடன் கைகோர்த்து போவதை கைவிடுங்கள். எம்.ஜி.ஆர் மீதும், மோடியா லேடியா சாவல் விட்ட ஜெயலலிதா மீது மதிப்பு வைத்தால் பாஜகவை கைவிட வேண்டும். நாளையே அறிக்கை விட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். நாளை பாஜகவில் ஒரு எம்பி வந்து விட்டால், அடுத்த 5 ஆண்டிகளில் ஜெய் அனுமான், ஜெய் ஸ்ரீராம் சொல்லும் காலம் வந்துவிடும் கூறி உரையை முடித்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment