பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தி.மு.க. கூட்டணியில் உள்ள திருமாவளவன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய திருமாவளவன், “திமுக கூட்டணியை பிரிக்க இலவு காத்த கிளியாக அவர்கள் காத்து கிடக்கின்றனர். தொடர்ந்து பல பகீரத முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த ஆசை அந்த அம்மாவுககும் (வானதி சீனிவாசன்) இருந்துள்ளது. அது அவரின் பேச்சில் தெரிகிறது. ஆனால் இதெல்லாம் ஒருபோதும் நடக்காது. பாரதிய ஜனதா, பாமக கட்சிகளோடு கூட்டணி இல்லை” என்றார்.
நேற்று, அங்கன்வாடி மையம் ஒன்றினை திறநதுவைத்த வானதி சீனிவாசன், திமுக ஆட்சியில் பட்டியலின மக்களின் பிரச்னை தீர்க்கப்படாது. திருமாவளவன் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“