'விடுதலை புலிகள் கொடியை சீமான் பயன்படுத்தக் கூடாது': திருமுருகன் காந்தி பாய்ச்சல்

விடுதலை புலிகள் கொடியை பயன்படுத்துவதை சீமான் நிறுத்த வேண்டும் என்றும், அந்த கொடிக்காக 40 ஆயிரம் பேர் உயிரைக் கொடுத்துள்ளார்கள் என்றும் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

விடுதலை புலிகள் கொடியை பயன்படுத்துவதை சீமான் நிறுத்த வேண்டும் என்றும், அந்த கொடிக்காக 40 ஆயிரம் பேர் உயிரைக் கொடுத்துள்ளார்கள் என்றும் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Thirumurugan Gandhi on Seeman and Naam Tamilar Katchi flag Tamil News

'அவர் தமிழர் இல்லை இவர் தமிழர் இல்லை என பேசுவது அரசியலா?' என்று திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பினார்.

Seeman | Naam-tamilar-katchi | Thirumurugan-gandhi: மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார். விடுதலை புலிகள் கொடியை பயன்படுத்துவதை சீமான் நிறுத்த வேண்டும் என்றும், அந்த கொடிக்காக 40 ஆயிரம் பேர் உயிரைக் கொடுத்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார். 

Advertisment

இதுதொடர்பாக திருமுருகன் காந்தி பேசுகையில், 'நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்தாகவும், அவருடன் உணவு சாப்பிட்டதாகவும் பல மேடைகளில் பேசி வருகிறார். 

தமிழர், திராவிடர் என பிரிவினை ஏற்படுத்தி தமிழகத்தை சீமான் கூறு போடுகிறார். அவர் தமிழர் இல்லை இவர் தமிழர் இல்லை என பேசுவது அரசியலா?. ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் ஜாதி, மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

விடுதலைப்புலிகள் கட்சி கொடியை தனது கட்சி கொடியாக பயன்படுத்துவதை சீமான் நிறுத்த வேண்டும். அந்த கொடிக்காக 40 ஆயிரம் பேர் உயிரைக் கொடுத்துள்ளார்கள்' என்று அவர் கூறியுள்ளார். 

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Naam Tamilar Katchi Seeman Thirumurugan Gandhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: