Advertisment

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: இந்து முன்னணிக்கு மதுரை ஐகோர்ட் அனுமதி

திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக பழங்காந‌த்த‌த்தில் இந்து முன்னணி போராட்டம் நடத்த அனுமதி வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பழங்காநத்தத்தில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை போராட்டம் நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai Bench of Madras High Court questions over govt law college administration Tamil News

திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக பழங்காந‌த்த‌த்தில் இந்து முன்னணி போராட்டம் நடத்த அனுமதி வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலைக்கு அருகில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் தர்காவும் தொடர்பாக சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து, கோயில் முன்பாக இன்று (பிப்ரவரி 4) ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருந்தன.

Advertisment

பொது அமைதி பாதிக்கப்படலாம் என்பதையும், மதத் துவேஷம் ஏற்படக்கூடும் என்பதையும் குறிப்பிடி, மதுரை காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாவட்டம் முழுவதும் பிப்ரவரி 3 மற்றும் 4ம் தேதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக இந்து முன்னணி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அவசர வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் பூர்ணிமா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளிக்கும்போது, தைபூசம் விழா நடைபெற்று வருவதால் அந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் மத கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சில அமைப்பினர் இந்த விவகாரத்தை அயோத்தி - பாபர் மசூதி விவகாரத்தை போல் உருவாக்க முயற்சிக்கின்றனர் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், திருப்பரங்குன்றத்தில் தைபூசம் மற்றும் தெப்பத் திருவிழா நடைபெற இருப்பதால் பக்தர்கள் திரளாக வருகை தருகிறார்கள். ஆனால், முழு மாவட்டத்திற்கே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இது அவசியமற்ற உத்தரவு என்று வாதிட்டார்.

Advertisment
Advertisement

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆர்ப்பாட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கி ஏன் அனுமதி வழங்க முடியாது என்று மதுரை காவல் ஆணையரிடம் விளக்கம் கோரினர். இதற்கிடையில், அரசு தரப்பு, பிப்ரவரி 19 அல்லது 20ம் தேதியில் மாற்று இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தது.

ஆனால் மனுதாரர்கள், "இன்றே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டும்" என வலியுறுத்தினர். இறுதியாக, நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 4) மாலை 5 முதல் 6 மணிக்குள் மதுரை அருகே பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது. மத மற்றும் தனிநபர்களை குறை கூறக் கூடாது. கலவரத்தை தூண்டும் வகையில் பேசக்கூடாது. ஒரு மைக்ரோஃபோன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பினால், இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான உரிமை மதிக்கப்பட்டுள்ளது, அதேசமயம் பொது அமைதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 

 

Madurai Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment