/tamil-ie/media/media_files/uploads/2018/08/s907.jpg)
ஏ.கே.போஸ்
திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸின் இறப்பு சான்றிதழை வரும் 17ம் தேதி தாக்கல் செய்ய அவர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சீனிவேலு, பதவியேற்ற சில நாட்களில் மரணமடைந்ததை அடுத்து, 2016 நவம்பரில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஏ.கே.போஸ், கடந்த 2ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவருக்கு எதிரான தேர்தல் வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏ.கே.போஸ் மரணமடைந்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, ஏ.கே.போஸின் இறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.