Advertisment

நீதிமன்றங்களில் திருவள்ளுவர், மகாத்மா காந்தி படத்துக்கு மட்டுமே அனுமதி: சென்னை ஐகோர்ட்

தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் திருவள்ளூவர் மற்றும் மகாத்மா காந்தி படங்கள் மட்டுமே வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai high court important order to DGP, madras high court, court order to avoid Two Finger test in sexual assault case, இருவிரல் பரிசோதனை, சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு, Two Finger test, Chennai high court order to avoid in sexual assault case

சென்னை ஐகோர்ட்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் தமிழ் கவிஞர் திருவள்ளுவர் உருவப்படங்களை மட்டுமே வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கையில் கூறியுள்ளது.

Advertisment

புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவு மண்டபத்தில் இருந்து பி.ஆர்.அம்பேத்கரின் உருவப்படங்களை அகற்ற ஆலந்தூரில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தை வற்புறுத்துமாறு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ஜூலை 7 சுற்றறிக்கை அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் அனுப்பப்பட்டது.

அதில், "தேசியத் தலைவர்களின் சிலைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவங்கள், உராய்வுக்கு வழிவகுத்தன" மற்றும் பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எழுந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அம்பேத்கர் உருவப்படங்களுக்கு வழக்கறிஞர் அமைப்புகள் அனுமதி கோரின. சம்மந்தப்பட்ட சங்கத்தின் மூத்த வழக்கறிஞர்கள் அம்பேத்கரின் உருவப்படங்களைத் திறக்க அனுமதி கோரின.

ஏப்ரல் 11-ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில், உயர் நீதிமன்றத்தின் முழு பெஞ்ச் அத்தகைய கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்தது.

இது தொடர்பாக நீதிமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை பட்டியலிட்ட சுற்றறிக்கையில், மார்ச் 11, 2010 அன்று நடைபெற்ற கூட்டத்தில், "இனி நீதிமன்ற வளாகங்களில் சிலைகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது" என்று சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், ஏப்ரல் 27, 2013 அன்று, அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்ற ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தை வற்புறுத்துமாறு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிதாக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் அவரது படத்தை வைக்கக்கோரிய கடலூர் வழக்கறிஞர் கோரிக்கையை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment