Advertisment

திருவண்ணாமலையில் செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய திமுக நிர்வாகி!

வாக்குவாதம் கைகலப்பாய் மாறவே கணேசனும், ரகுபதி மாசிலாமணியும் சேர்ந்து உரிமையாளர் மணிகண்டனை தாக்கினர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய திமுக நிர்வாகி

செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய திமுக நிர்வாகி

செல்போன் கடை கடை உரிமையாளரை திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தானிப்படி கிராமத்தின் பேருந்து நிலையம் அருகில் மணிகண்டன் என்பவர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் வாடிக்கையாளருக்கும், உரிமையாளருக்கும் இடையே நடைபெற்ற கைகலப்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மணிகண்டன் கடையில் தானிப்பாடியை சேர்ந்த கணேஷ் என்பவர் செல்போனை சரி செய்யக் கொடுத்திருந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தண்டராம்பட்டைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி ரகுபதி மாசிலாமணியுடன் அங்கு சென்ற கணேஷ், செல்போனை வாங்கி விட்டு சரியாக வேலை செய்யவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் கைகலப்பாய் மாறவே கணேசனும், ரகுபதி மாசிலாமணியும் சேர்ந்து உரிமையாளர் மணிகண்டனை தாக்கினர். இதில் மணிகண்டன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment