Advertisment

திருவாரூர் அரசு கல்லூரி, 'சனாதன எதிர்ப்பு சுற்றிக்கை' வாபஸ்: முதல்வர்

இந்த சுற்றறிக்கை இன்று திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி மீது மும்பை மிராசாலை காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
College principals anti Sanatana circular

திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையிலான சுற்றறிக்கை ஒன்று வெளியானது.

Tamilnadu sanadhan row : திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையிலான சுற்றறிக்கை ஒன்று வெளியானது.

Advertisment

இந்தச் சுற்றிக்கையை கல்லூரி முதல்வர் ராஜாராமன் வெளியிட்டிருந்தார். அதில், “இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துக்களை அண்ணா பிறந்த நாளான செப்.15ஆம் தேதி மாலை 3 மணியளவில் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழக பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பேசிய கட்சியின் மாநில துணை தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், “சனாதனம் குறித்து அரசு கல்லூரி மாணவர்கள் இடையே திமுக நஞ்சை விதைக்கிறது. கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கை அரசியலமைப்புக்கு எதிராக இல்லையா?” எனக் கேள்வியெழப்பி இருந்தார்.

இந்த நிலையில், இந்த சுற்றறிக்கை இன்று திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி மீது மும்பை மிராசாலை காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த மாநாட்டில், சனாதன தர்மத்தை கொசு, டெங்கு, மலேரியா உடன் ஒப்பிட்டு என சர்ச்சைக்குரிய வகையில் உதயநிதி பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment