/indian-express-tamil/media/media_files/lxfTHKZeOK1rFRZGV3uB.jpg)
சென்னை அருகே திருவேற்காட்டில் அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் அமைத்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவில் கருவறையில் உற்சவர் கருமாரியம்மன் கழுத்தில் இருந்த 8 சவரன் தங்கச் சங்கிலி மாயமாகியுள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகிகள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவிலில் தினக் கூலியாக பணிபுரிந்து வந்த அர்ச்சகர் சண்முகம் என்பவர் நகையை திருடியது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சண்முகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்மன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கோவில் அர்ச்சகரே திருடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.