அரசின் நலத்திட்டங்கள்: மக்களுக்கு முழுமையாக கிடைக்கிறதா? சொந்த தொகுதியில் அன்பில் மகேஷ் நேரடி ஆய்வு

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் சமீபத்தில் முதலமைச்சரால் காணொளி வாயிலாகத் திறக்கப்பட்ட பல்வேறு முக்கியத் திட்டங்களை இன்று நேரில் ஆய்வு செய்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் சமீபத்தில் முதலமைச்சரால் காணொளி வாயிலாகத் திறக்கப்பட்ட பல்வேறு முக்கியத் திட்டங்களை இன்று நேரில் ஆய்வு செய்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy

Trichy

தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் எந்த அளவுக்குச் சென்று சேர்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் சமீபத்தில் முதலமைச்சரால் காணொளி வாயிலாகத் திறக்கப்பட்ட பல்வேறு முக்கியத் திட்டங்களை இன்று நேரில் ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு செய்த முக்கியத் திட்டங்கள் ஒரு பார்வை:

Advertisment

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மேம்பாடு: வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தைப் பார்வையிட்டார். இது முகாம்களில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்துக்கு வலு சேர்க்கும்.

Trichy

புதிய நியாய விலைக் கடைகள்:

வாழவந்தான் கோட்டை ஊராட்சி - அய்யம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிதி ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட நியாய விலைக் கடை.

Advertisment
Advertisements

Trichy

நவல்பட்டு முதல்நிலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிதி ரூ.12.67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட நியாய விலைக் கடை. 

கல்வி உள்கட்டமைப்பு மேம்பாடு:

Trichy

பத்தாளப்பேட்டை ஊராட்சியில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம். இது மாணவர்களுக்குச் சிறந்த கற்றல் சூழலை வழங்கும்.

பழங்கனான்குடி ஊராட்சி - பூலாங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிதி ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட அங்கன்வாடி.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்: 

Trichy

மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நபார்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட பல மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை அமைச்சர் பார்வையிட்டார்.

சோழமாதேவி ஊராட்சி - பீபிள்ஸ் நகரில் ரூ.8.04 லட்சம் மதிப்பீட்டில்.

Trichy

நவல்பட்டு ஊராட்சி - அண்ணா நகரில். குண்டூர் ஊராட்சியில் 10 ஆயிரம் லிட்டர் மற்றும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன் இருவேறு இடங்களில்.

குண்டூர் ஊராட்சி, திருவளர்ச்சிப்பட்டியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன்.

கீழமுல்லைக்குடி ஊராட்சி - காந்திபுரத்தில் ரூ.18.42 லட்சம் மதிப்பீட்டில். இந்த நீர்த்தேக்கத் தொட்டிகள், பல கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க முக்கியப் பங்காற்றுகின்றன.

Trichy

இந்த நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், ஒன்றிய திமுக செயலாளர்கள் கே.எஸ்.எம். கருணாநிதி, கங்காதரன், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: