Advertisment

இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் சவால் - வைகோ

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று நடக்கும் பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

author-image
WebDesk
New Update
sasasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று நடக்கும் பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். 20 நாட்கள் பிரச்சாரம் செய்யும் அவர் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர், திருச்சி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.

Advertisment

 பின்னர், திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

வரும் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். ஏகாதிபத்தியத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கின்ற தர்மயுத்தம் தான் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என இன்று கோஷத்தை வைக்கின்ற இந்துத்துவா சக்திகள் சனாதான சக்திகள் கை ஓங்கி விடக்கூடாது என்பதிலே இந்தியா கூட்டணி வலுவாகவே இருக்கிறது.

 இன்று தமிழகத்தில் பிரச்சாரத்தை தமிழக முதல்வர் திராவிடம் மாடல் ஆட்சியை அனைத்து மாநிலத்திற்கும் முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக நடத்தி வருகின்ற மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை துவங்குகிறார்.

தமிழகத்திலே புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தான் டெல்லி முதலமைச்சரை கைது செய்து கொண்டு போனார்கள். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்கள் இந்துத்து அஜண்டாக ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். சிஏஏ சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமியருக்கு கொடுக்க வேண்டிய உரிமை கூட மறுத்து வருகிறார்கள்.

 பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றார்கள். ஆகவே ஜனநாயகத்திற்கு மதச்சார்பற்ற தன்மைக்கும் சம்மதர்ம கொள்கைக்கும் நேர்விரோதமாக ஒரு கூட்டம். இந்தியாவில் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் அவர்கள் காலெடுத்து வைக்க முடியாது.

இது பெரியார் பூமி, அறிஞர் அண்ணா, கலைஞருடைய பூமி. இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு உண்மையாக விடுக்கப்பட்ட சவால். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பாரதிய ஜனதா இது பழி வாங்கும் அரசியல் என ஒத்துக்கொள்ள மறுக்கின்றது. அவர்கள் எதைத்தான் ஒத்துக்கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment