/indian-express-tamil/media/media_files/63kxyZDy6IaApVYKCQL5.jpg)
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே பேசிக்கொண்டிருந்த அவரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. அவரை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ஆம்ஸ்ட்ராங் உடல் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வைக்கப்பட உள்ளது. அவரது உடலை பகுஜன் சமாஜ் அலுவலகத்தில் வைக்க அனுமதி கோரியுள்ளோம்.
இந்தக் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. இந்த கொலையை சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் தூண்டிவிட்டவர்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என்றார். ஆம்ஸ்ட்ராங் பொதுமக்களின் பிரச்னைக்கு குரல் கொடுப்பவர். அவருக்கு ஆங்காங்கே பகை, முன்விரோதம் உண்டு. இது போலீசுக்கு தெரியும். ஆகவே அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும்” என்றார். மேலும், தென் மாவட்டங்களில் அடிக்கடி தலித்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.