Advertisment

திருமணமான 3 நாளில் காதல் ஜோடி துள்ள துடிக்க வெட்டிக் கொலை: தூத்துக்குடியில் கொடூரம்

தூத்துக்குடியில் திருமணமாக 3 நாளில் காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். தாலியின் ஈரம் காயும் முன்னே இந்த ஆணவக் கொலை அறங்கேறி உள்ளது. சம்பவ இடத்தில் எஸ்.பி. விசாரணை நடத்தினார்.

author-image
WebDesk
New Update
 honour killing in Tuticorin

அக்.30ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

Tuticorin honour killing | Mariselvam Karthika Murder | தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவரின் மகனான மாரி செல்வம் (24) என்பவர் முருகேசன் நகரில் வாடகை வீட்டில் தங்கி வேலைபார்த்து வந்தார்.

அப்போது அவருக்கு திரு.வி.க நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகள் கார்த்திகா (20) உடன் காதல் ஏற்பட்டது.

இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அக்.30ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் முருகேசன் நகரில் வசித்துவந்தனர். இந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் வீடு புகுந்த 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் இருவரையும் வெட்டிச் சாய்த்து படுகொலை செய்தது.

இந்தச் சம்பவம் குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இருவரின் உடல்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், ரூரல் டிஎஸ்பி சுரேஷ்குமார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் கார்த்திகாவின் உறவினர்கள் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருமணமான 3 நாளில் கணவன்-மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tuticorin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment