Advertisment

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் : சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும்! தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக, சிபிஐ விசாரணையே சரியானதாக இருக்கும். சிறப்பு விசாரணை கோரிய மனுவிற்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்திரா பானர்ஜி

இந்திரா பானர்ஜி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை செய்வதே சரியானதாக இருக்கும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி மக்கள் அரசு கட்சி தலைவர், வழக்கறிஞர் ரஜினிகாந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும், ‘‘துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்? எத்தனை பேர் உண்மையில் பலியாகினர் என்ற விவரத்தை வெளியிட உத்தரவிட வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பலியான 13 பேர் குடும்பங்களுக்கும் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று கேட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ‘‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக, சிபிஐ விசாரணையே சரியானதாக இருக்கும். சிறப்பு விசாரணை கோரிய மனுவிற்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்’’ என்று கூறினார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஜூலை 6 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment