வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்: சென்னையில் ஏப்ரலுக்குள் 3 பாலங்கள் தயார்

சென்னையில் ஏப்ரல் மாதத்திற்குள் மூன்று பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் ஏப்ரல் மாதத்திற்குள் மூன்று பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்: சென்னையில் ஏப்ரலுக்குள் 3 பாலங்கள் தயார்

சென்னையில் திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கட்டப்பட்டு வரும் 3 பாலங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சென்னை பெரு நகர மாநகராட்சி நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

Advertisment

திரு.வி.க.நகர் ஸ்டீபன்சன் சாலையில் இருந்து ஓட்டேரி நுல்லாக வழியாக செல்லும் பாலம் ரூ. 43.46 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. இங்கு சாலை அமைக்கும் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

publive-image

இது தவிர, கொளத்தூர் மெயின் ரோடு மற்றும் ஐ.சி.எப் சாலையை இணைக்கும் அண்ணா நகரில் உள்ள பாலம் ஏப்ரல் பிற்பகுதியில் பணிகள் முடிக்கப்படும். தி.நகர் ஸ்கைவாக் பாலம் பிப்ரவரிக்குள் தயாராகிவிடும். எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் கட்டுமானம் பணிகள் காரணமாக ஏப்ரலில் முழு பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements
publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: