/tamil-ie/media/media_files/uploads/2022/12/Express-Image-28.jpg)
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'பிச்சைக்காரன்', தமிழ் மற்றும் தெலுங்கு மக்களால் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும், இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் தயாரிப்பதற்கு படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். 'பிச்சைக்காரன் 2' படத்திற்கு விஜய் ஆண்டனி தயாரித்து இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆகையால், படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து, இந்த படத்திற்காக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை டிரோன் கேமரா வைத்து படம்பிடிக்க முயன்றனர்.
அனுமதியின்றி சென்னை உயர்நீதிமன்றத்தை டிரோன் வைத்து படம்பிடிக்க முயன்றதால் மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
படக்குழுவைச் சேர்ந்த நவீன் குமார், சுரேஷ் மற்றும் ரூபேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீன் மூலம் வெளியே வந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.