Advertisment

சென்னை மண்ணிவாக்கம், மலையம்பாக்கம், வண்டலூர் பகுதிக்கு வரும் 3 புதிய ஐடி பூங்காக்கள் - தமிழக அரசு திட்டம்

சென்னை புறநகர் பகுதியான வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் மூன்றாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நிலத்தின் மதிப்பு ஒரு ஏக்கர் 8.05 கோடி ரூபாயாக உள்ளது.

author-image
WebDesk
New Update
avadi IT Park, New IT Park near Avadi, Avadi IT Park, Avadi Pattabiram IT Park, Pattabiram Tidel IT Park, ஆவடி ஐடி பார்க், ஆவடி தகவல் தொழில்நுட்ப பூங்கா, பட்டாபிராம் ஐடி பார்க், பட்டாபிராம் தொழில்நுட்ப பூங்கா, 10000 ஏக்கரில் ஐடி பார்க், 25,000 வேலைவாய்ப்பு, 235 கோடியில் ஆவடியில் ஐடி பூங்கா, Tidel IT Park, Chennai Avadi IT park, chennai avadi tidel it park, Avadi IT park plan laid by cm edappadi k palaniswami, cm edappadi k palaniswami laid Avadi IT park, Avadi IT park estimated rs 235 crore, 10 acres IT park in avadi, Avadi IT park produce 25,000 employment

3 புதிய ஐடி பூங்காக்கள் - தமிழக அரசு திட்டம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை புறநகர் பகுதியான வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் மூன்றாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நிலத்தின் மதிப்பு ஒரு ஏக்கர் 8.05 கோடி ரூபாயாக உள்ளது.

Advertisment

சென்னை வெளிப்புற ரிங் ரோடு கிழக்குப் பகுதியில், 50 மீட்டர் பரப்பில் 3 தளங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா, தமிழ்நாட்டில் மென்பொருள் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, மலையம்பாக்கம், மண்ணிவாக்கம் மற்றும் வண்டலூர் ஆகிய 3 இடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அனுமதி வழங்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை வெளிப்புற ரிங் ரோடு பகுதியில், நில மதிப்பீட்டை நடத்திய பிறகே இந்த இடங்கள் ஒதுக்கப்பட்டன. மலையம்பாக்கம் மார்க்கத்தில் 5.33 ஏக்கர் நிலம் ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் மதிப்பில், முதல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக மண்ணிவாக்கத்தில் 5.04 ஏக்கர் பரப்பளவில் நில மதிப்பு ஒரு ஏக்கர் 5 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மூன்றாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் திட்டமிடப்பட்டுள்ளது, அங்கே நிலத்தின் மதிப்பு ஒரு ஏக்கருக்கு 8.05 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, தமிழக அரசு உலகளாவிய திறன் மையங்களில் (GCCs) இளைஞர்களுக்கு உயர்தர வேலைகளை உருவாக்க முடியும் என்பதால், மாநிலத்தில் ஒரு தளத்தை அமைக்க இலக்கு வைத்துள்ளது. உலகளாவிய ரியல் எஸ்டேட் ஆலோசகர் நிறுவனமான நைட் ஃபிராங்கின் அறிக்கையின்படி, 50 மீட்டர் நீளத்திற்கு நில மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 160 ஜி.சி.சி.க்கள் உள்ளன, இது தேசிய எண்ணிக்கையில் 10% ஆகும்.

முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான (சி.பி.ஆர்.இ) சவுத் ஏசியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘இந்தியாவின் உலகளாவிய திறன் மையங்கள் - ஒரு புதிய தொழில்நுட்ப சகாப்தம்’ என்ற அறிக்கையில், ஜி.சி.சி. 2023 மற்றும் 2025 க்கு இடையில் 62 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment