செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் காவலாளி மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகே இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, நோ என்ட்ரி வழியாக கார் செல்ல முயன்றதால், அங்கிருந்த காவலாளி தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அக்குடும்பத்தினர், காரை தடுத்து நிறுத்திய காவலாளி மீது கடும் தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, பைப் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு காவலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பிரபுதாஸ், சண்முகப்பிரியா மற்றும் கீர்த்தனா ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களைக் கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“