/indian-express-tamil/media/media_files/2025/05/06/TXHnD53vkH1Z2xgpLU6e.jpg)
தஞ்சை அருகே பா.ஜ.க பெண் பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாக மூன்று பேர் சரண் அடைந்துள்ளனர்.
மதுரை மத்திய தொகுதி பா.ஜ.க மாநகரத் தலைவராக செயல்பட்டு வந்த சரண்யா, தனது கணவர் பாலன் மற்றும் குழந்தைகளுடன் பட்டுக்கோட்டையை அடுத்த உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அதே பகுதியில் இத்தம்பதிக்கு சொந்தமாக அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் என்ற கடை இருக்கிறது.
நேற்று (மே 5) இரவு, தனது கடையை மூடி விட்டு வீடு திரும்பிய சரண்யாவை. அடையாளம் தெரியாத சிலர் படுகொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 2021-ஆம் ஆண்டில் சரண்யாவின் முதல் கணவர் உயிரிழந்த பின்னர், பாலன் என்பவரை சரண்யா மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில், சரண்யா கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறி கபிலன், குகன் உள்ளிட்ட மூன்று பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதில் கபிலன் என்பவர் கொலையான பெண்ணின் கணவருடைய முதல் மனைவியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி - க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.