/tamil-ie/media/media_files/uploads/2022/05/rain-2-2.jpg)
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று (ஜூலை 23) பல பகுதிகளில் மழை பெய்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணிநேரத்திற்கு, நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மேலும், ஜூலை 26, வட கடலோர தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மாலை தி நகர், திருவல்லிக்கேணி, அமைந்தகரை, சேத்துப்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ரயில் நிலையங்களில் இரவு 7.30 மணி வரை மழை பெய்தது. ஜூன் 1 முதல் நுங்கம்பாக்கத்தில் 27 செ.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 24 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், "சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும், பகல் நேர வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.