ஒரே ஒரு வீடியோ; வீட்டிற்கு ரைடு சென்ற வனத்துறை... புலியின் நகத்தை கழுத்தில் அணிந்து இருந்த நபர் கைது

புலியின் நகத்தை கழுத்தில் அணிந்திருந்த நபர் ஒருவரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலியின் நகத்தை கழுத்தில் அணிந்திருந்த நபர் ஒருவரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
புலி  பல்

புலி பல் அணிந்த நபர் கைது

சமூக வலைதளத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் கழுத்தில் புலி பல் அணிந்து இருந்ததாக நபர் ஒருவர் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டு உள்ளார்.  இது குறித்து இன்ஸ்டாகிராம் நபர் அந்த அணிகலன் அணிந்து இருந்த நபரிடம் கேட்ட போது அது புலியின் நகம் என்றும் ஆந்திரா அருகில் அதனை வாங்கியதாகவும், தனக்கு வேட்டையாடும் ஆசை இருப்பதாகவும் ஆனால் வேட்டைக்கு செல்லவில்லை என தெரிவித்து உள்ளார்.  

Advertisment

வீடியோ காட்சிகளை அந்த இன்ஸ்டாகிராம் நபர் அவரது பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அது வைரலானது. இந்த வீடியோ வைரலான நிலையில், வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த அணிகலன் அணிந்து இருந்த நபரின் பெயர் பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள அவரது வீட்டை சோதனையிட்டதில் ஒரு புள்ளிமானின் கொம்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

பாலகிருஷ்ணன் இன்று வனத் துறை அதிகாரிகள் முன்பு ஆஜரான நிலையில் அவரிடம் இருந்து அந்த நகம் பெறப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

Advertisment
Advertisements

மேலும் அந்த நகம் நீதிமன்றம் மூகல் AIWC க்கு அனுப்பப்பட்டு அறிக்கை கிடைத்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Coimbatore Forest Department

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: