/indian-express-tamil/media/media_files/Xm3lZLTGzSaORdEG15bo.jpg)
கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பியஸ்.ஆர்.தாத்தே. ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் பூ மார்க்கெட் தேவாங்கபேட் வீதி 2-ல் ராஜகுரு என்ற பெயரில் நான்கு மாடி கட்டிடத்தில் டைல்ஸ் மற்றும் சேனிட்டரிவேர்ஸ், சிபி பிட்டிங்க்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இங்கு 8 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று (பிப்.29) காலை 9.30 மணியளவில் அவர் கடை திறந்துள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டு, தீ பரவியுள்ளது. இதனையடுத்து உடனடியாக மின்சாரத்தை துண்டித்துள்ளார். அதற்குள் தீ மளமளவெனப் பரவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை தண்ணீர் கொண்டு அணைத்தனர். சிறிது நேரத்திற்கு, கீழ் தளம் மற்றும் முதல் மாடியில் இருந்து புகை வெளியேறியது. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கீழ் தளத்தில் பரவிய தீயால் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து ஆர்.எஸ்.புரம் போலீசார் தீ விபத்திற்கான காரணத்தை விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.