/tamil-ie/media/media_files/uploads/2022/06/Pradeepkumar-ias.jpg)
க. சண்முகவடிவேல், திருச்சி
தமிழகத்தின் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக பிரதீப் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமை செயலராக இருந்த பணீந்திர ரெட்டி தமிழகத்தின் புதிய உள்துறை செயலராக நியமிக்கப் பட்டுள்ளார். உள்துறை செயலராக இருந்த எஸ்.கே பிரபாகர் வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.
அதேபோல், தமிழகத்தின் முந்தைய ஆட்சியில் சுகாதாரத்துறை செயலராகவும் தற்போதைய ஆட்சியில் மருத்துவத்துறை செயலராகவும் பணிபுரிந்து வந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மருத்துவத்துறையின் புதிய செயலாளராக கு.செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சு.சிவராசு, கோவை வணிக வரித்துறை இணை ஆணையராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப்குமார், நாகப்பட்டினத்தில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கூடுதல் thiட்இயக்குநராக பணி புரிந்துள்ளார். பின்னர், ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கிராமப்புற வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரியாகவும் கூடுதல் ஆட்சியராகவும் (வளர்ச்சி) பணியாற்றியவர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.