சென்னை திருச்சி இண்டிகோ விமானத்தில் கோளாறு: பயணிகள் அச்சம்

சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்படவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் பயணிகள் பதட்டம் அடைந்தனர்.

சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்படவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் பயணிகள் பதட்டம் அடைந்தனர்.

author-image
WebDesk
New Update
Tiruchirappalli IndiGo flight malfunction Tamil News

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னையிலிருந்து திருச்சிக்கு 73 பயணிகளுடன் புறப்பட இருந்தது.

சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்படவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் பயணிகள் பதட்டம் அடைந்தனர்.

Advertisment

73 பயணிகளுடன் புறப்படவிருந்த இந்த விமானம், புறப்படத் தயாராக இருந்த தருணத்தில் ஓடுபாதையில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, தொழில்நுட்ப நிபுணர்கள் அவசரமாக சோதனை மேற்கொண்டனர்.

காலை 5.45 மணிக்கு புறப்படவிருந்த இந்த விமானம், கோளாறை சரிசெய்து சுமார் ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு புறப்பட்டது. பயணிகள் பாதுகாப்பிற்காக அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாமதத்தால் சில பயணிகள் இடைப்பட்ட இணைப்பு பயணங்களை தவறவிட்டதாகவும் பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: