/tamil-ie/media/media_files/uploads/2022/12/Tiruchi-theft-3.jpg)
திருச்சி பாலக்கரை, சங்கிலியாண்டபுரம் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இரவில் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடத்தெரு பகுதியில் குமார் என்பவர் கைபேசி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் இரண்டு கதவுகள் பூட்டு போட்ட நிலையில் ஒரு கதவை உடைத்த கொள்ளையர்கள் இரவில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் மறைந்து இருந்து மறுமுறை முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கடைக்கு உள்ளே அவர்களால் செல்ல முடியவில்லை.
இதேபோல் கடந்த 12-ம் தேதி சங்கிலியாண்டபுரம் பகுதியில் ஜாகீர் என்பவர் மொபைல் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. கடந்த மூன்று நாட்களாக அதே பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளில் தொடர் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்து வந்துள்ளது. இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றும் 14-ம் தேதி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் தெளிவாக சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாததால் அப்பகுதியில் மொபைல் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் இரவு நேரத்தில் கடையை பூட்டிவிட்டு மீண்டும் மறுநாள் காலை கடை திறக்கும் வரை பதற்றத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவங்கள் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.