பயணிகள் கவனத்திற்கு... திருச்சி டூ தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி- தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயங்கி வந்த கோடைகால சிறப்பு ரயிலை தற்போது வாரத்தில் திங்கள்கிழமை தவிர, மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருச்சி- தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயங்கி வந்த கோடைகால சிறப்பு ரயிலை தற்போது வாரத்தில் திங்கள்கிழமை தவிர, மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rail

திருச்சி- தாம்பரம் இடையே பகல் நேர ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு அக்.11-ம் தேதி முதல் பண்டிகைகால சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

திருச்சி- தாம்பரம் இடையே பகல் நேர ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு அக்.11-ம் தேதி முதல் பண்டிகைகால சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் அதிகாலை 5.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக 12.30 மணிக்கு தாம்பரத்தை அடையும். மறு வழித்தடத்தில் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.35-க்கு திருச்சியை வந்ததடையும் வகையில் ரயில் இயக்கபட்டது.

Advertisment

இந்த ரயிலில் காலையில் கிளம்பி சென்னை சென்று தங்கள் வேலையை முடித்துக் கொண்டு அன்று இரவே வீடு திரும்பி விடலாம் என்பதால், இந்த ரயிலை இன்டர்சிட்டி ரயில் என அழைத்து பயணிகள் மகிழ்ந்தனர். இந்த ரயிலுக்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பும் இருந்தது. ஆனால், பயணிகளின் மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. வடநாட்டில் நடந்த கும்பமேளாவுக்காக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு அங்கே திருப்பி அனுப்பப்பட்டன. அதில், இந்த ரயிலும் ஒன்று. இதனால், இந்த ரயில் 2 மாதங்களுக்கும் மேலாக இந்த வழித் தடத்தில் இயக்கப்படவில்லை.

கும்பமேளா முடிந்ததும் மீண்டும் இந்த ரயில் கோடைகால சிறப்பு ரயிலாக வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் மட்டும் இயங்கும் இந்த ரயிலை அனைத்து நாட்களிலும் இயக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள், டெல்டா மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் பயணிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயங்கி வந்த கோடைகால சிறப்பு ரயிலை தற்போது வாரத்தில் திங்கள்கிழமை தவிர, மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Advertisment
Advertisements

அதன்படி, ஏப்ரல் 29-ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை இந்த ரயில் வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும். விரைவில் இதற்கான முன்பதிவு தொடங்கும் எனவும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Special Trains

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: