நெல்லை மேயர் தேர்தல்: தி.மு.க சார்பில் ராமகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிப்பு

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க சார்பில் ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு அறிவிப்பு

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க சார்பில் ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Nellai mayo ne

திருநெல்வேலி மாநகராட்சி மேயருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை (ஆக.5) நடைபெற உள்ள நிலையில் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசுஆகியோர் அறிவித்தனர்.

Advertisment

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நெல்லை மாநகராட்சியில் 51 வார்டுகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பெரும்பான்மையான இடங்களில்  வெற்றி பெற்றது. பின்னர் நெல்லை மாநகராட்சி மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிலிருந்து இவர் மீது திமுக கவுன்சிலர்கள் பலர் தொடர் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. பின்னர் இது கைவிடப்பட்ட நிலையில்,  மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்தார்.இதையடுத்து, நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், இன்று (ஆக.4) திருநெல்வேலி மாநகராட்சி திமுக கவுன்சிலர்களுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மேயர் தேர்தலில் தி.மு.க சார்பில் ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: