சந்திர கிரகணம்; திருப்பதி கோவில் நடை 8 மணி நேரம் மூடல்; தேவஸ்தானம் அறிவிப்பு

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோவில் நடை 8 மணி நேரம் அடைக்கப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோவில் நடை 8 மணி நேரம் அடைக்கப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Tirupati buses from Chennai

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோவில் நடை 8 மணி நேரம் அடைக்கப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோவில் நடை 8 மணி நேரம் அடைக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Advertisment

இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில், வருகிற 29 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2.22 மணிக்கு சந்திரகிரகணம் நிறைவடையும். கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கோவில் நடை சாத்தப்படும்.

இதனால், நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 7.05 மணி முதல் 29 ஆம் தேதி அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.

அதன் பின் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, ஏகாந்தத்தில் சுத்தி, சுப்ரபாத சேவை செய்த பிறகு காலை 5.15 மணிக்கு பிறகு சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் ஏழுமலையான் கோவில் நடை சுமார் 8 மணி நேரம் வரை சாத்தப்படும்.

Advertisment
Advertisements

மேலும் நாளை சகஸ்ர தீப அலங்கார சேவை, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம் போன்றவை ரத்து செய்யப்படும். திருமலையில் உள்ள அனைத்து தலங்களிலும் அன்ன பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நிறுத்தப்படும். இதை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்களது திருமலை யாத்திரையை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tirupathi Devasthanam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: