Advertisment

அக்னி நட்சத்திரத்தை சமாளிக்க பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்; திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு

கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது; திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Tirupathi 1

கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது; திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அக்னி நட்சத்திரத்தை சமாளிக்க திருப்பதி கோவிலில், பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Advertisment

திருப்பதியில் உள்ள திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் கட்டிடத்தில் டயல் யுவர் ஐ.ஓ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு கோவில் நிர்வாக அதிகாரி ஏ.வி. தர்மா ரெட்டி பதில் அளித்தார். அப்போது திருமலை தேவஸ்தானம் வழங்கும் தரிசனம், தங்குமிடம், உணவு மற்றும் இதர வசதிகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டினர்.

இதற்கிடையில், இன்று அக்னி நட்சத்திரம் தொடங்குவதால், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் கோவில் நிர்வாக அதிகாரி ஏ.வி. தர்மா ரெட்டி விளக்கம் அளித்தார்.

கோடை விடுமுறை காரணமாக சுவாமி தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆதலால், கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது.

கோடை விடுமுறையில் திருமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உணவு, மோர், குடிநீர், காலை உணவு பக்தர்களுக்கு வழங்கப்படும். தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்படும். கோவில் வீதிகளில், பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் அனைத்திலும் வெயிலின் உஷ்ணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் பந்தல்கள், கூல் பெயிண்டு கார்பெட்டுகள் அமைத்துள்ளோம். நாங்கள் அவ்வப்போது தண்ணீரை தரையில் தெளிக்கிறோம். நாராயணகிரி தோட்டங்கள் மற்றும் கோவில் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க தற்காலிக கொட்டகைகள் அமைத்துள்ளோம். 

திருமலையில் ஆகாசகங்கா ஸ்ரீ பாலஞ்சநேய சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வரும் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆகாசகங்கையில் உள்ள ஸ்ரீ பாலஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறும். 

மே 17 முதல் 19 ஆம் தேதி வரை பத்மாவதி திருக்கல்யாணம் திருமலையில் வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது. மே 22 ஆம் தேதி தரிகொண்டா வெங்கமாம்பாள் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்வாறு தர்மா ரெட்டி தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tirupathi Devasthanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment