/indian-express-tamil/media/media_files/IoEcDklxh5dgtTXEcZyh.jpg)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது; தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 23 ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும். இதனையடுத்து, சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை கடந்த 10 ஆம் தேதி ஆன்லைனில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டது. இதில் தினமும் 25,000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2024 பிப்ரவரி மாதம் சிறப்பு தரிசனத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள அறைகள் முன்பதிவு நாளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
எனவே. பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in/home/dashboard என்ற இணையதளப் பக்கத்தில் தரிசனடிக்கெட்மற்றும்அறைகளைமுன்பதிவுசெய்துகொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.