நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு
திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவக்குமார் அவதூறாக பேசியதாக பட்டியலிட்டுள்ளது. இதனால், திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் போலீஸார் நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி ஏழுமலையான் கோயில் பற்றி அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Advertisment
அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவக்குமார் அவதூறாக பேசியதாக பட்டியலிட்டுள்ளது. இதனால், திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் போலீஸார் நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி ஏழுமலையான் கோயில் பற்றி அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோயிலைக் குறிப்பிட்டு தமிழகத்தில் மருத்துவமனைகளின் நிலைமை பற்றியும் கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று பேசியது சர்ச்சையானது. அப்போது, நடிகர் சிவக்குமார் அதற்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சிவலிங்கத்தை செய்துக்கியவர்கள் அதற்கு உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது என்று பேசிய வீடியோ வைரல் ஆனது.
இந்த நிலையில், நடிகர் சிவக்குமார் திருப்பதி ஏழுமலையான் கோயில் பற்றி அவதூறாக பேசியதாக திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"