சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மல்லாகோட்டை மேகா ப்ளு மெட்டல்ஸ் கல் குவாரியில் மண் மற்றும் பாறை சரிந்து விழுந்த விபத்தில் 27 வயது வட மாநில இளைஞர் உட்பட 6 பேர் பலியானர்கள்.
தமிழக முழுவதும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தில் குவாரி உரிமையாளர் உட்பட 5 பேர் மீது எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த உரிமையாளரின் தம்பி மற்றும் சூப்பர்வைசர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் அருகே மல்லாக்கோட்டையில் இயங்கி வருகின்ற மேகா ப்ளூ மெட்டல் கிரஷர் குவாரியில் மே 21 ஆம் தேதி வெடிவைப்பதற்காக துளையிட்ட போது, எதிர்பாராத விதமாக பாறை சரிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் பலியாகினர்.
பல்வேறு விதிமீறல்களுடன், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் குவாரி நடத்தப்பட்டு வந்த நிலையில் குவாரிக்கான உரிமத்தை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்நிலையில் குவாரி உரிமையாளர் மேகவர்ணன் 48 உள்ளிட்டோர் மீது மல்லாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தகவல் அறிந்தவுடன் மேகவர்மன் உள்ளிட்டோர் தலைமறைவாகினர்.
அதனை தொடர்ந்து திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையிலான தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார் இன்று மேகவர்மனின் தம்பி கமலதாசன் (45), மதுரை மாவட்டம் இ.மலம்பட்டியை சேர்ந்த குவாரி சூப்பர்வைசர் கலையரசன் (32) ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேகவர்மன் உள்ளிட்ட 3 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.