கோவை, திருப்பூர் வழியாக செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் மொட்டுமரி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக செல்லும் வாராந்திர ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவனந்தபுரம்- கோர்பாவிற்கு வாரத்துக்கு இருமுறை இயக்கப்படும் ரயில் நாளை டிச. 26 மற்றும் டிச.30 ஆம் தேதி மற்றும் வருகிற 2,6 ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாகவும் கோர்பா-திருவனந்தபுரம் ரயில் 28ஆம் தேதி, வருகிற 1,4,8 ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரக்பூர்-திருவனந்தபுரம் இடையே வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை டிச. 26 ஆம் தேதி வருகிற 3,5 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரம்-கோரக்பூர் ரயில் வருகிற 31 ஆம் தேதி, 7,8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம்-இந்தூர் வாராந்திர ரயில் வருகிற 28 ஆம் தேதி, 4 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் இந்தூர்-திருவனந்தபுரம் வாராந்திர ரெயில் வருகிற 30 ஆம் தேதி, 6 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“