Advertisment

சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tiruppur minor Girl sexual assault 9 arrested  arrested under POCSO Act Tamil News

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி கருவுற்று 4 மாதங்கள் கடந்த பிறகே உறவினர்களுக்கு தெரிய வந்த நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tiruppur: திருப்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 9 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த சிறுமி கருவுற்று 4 மாதங்கள் கடந்த பிறகே உறவினர்களுக்கு தெரிய வந்த நிலையில் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், உறவினர்களின் புகார் பேரில் உடுமலைப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு 9 பேரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 3 (14, 15, 16 வயது) சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tiruppur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment