/indian-express-tamil/media/media_files/7lssh4wNLXbK6GFcCvg4.jpg)
திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூஸ் 7 தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளர் நேசப்பிரபு. இவர் கடந்த வியாழக்கிழமை பணியில் இருந்தபோது மர்ம நபர்கள் நோட்டம் விட்டுள்ளனர். இந்நிலையில் தன்னை சில பேர் நோட்டம் விடுவதாக, காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு அழைத்து தெரிவித்துள்ளார்.
ஆனால் போதிய காவலர்கள் இல்லை என்றும், காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளிக்க வேண்டும் என்று காவல்நிலையத்தில் உள்ள போலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரை மர்ம நபர்களை சரமாரியாக வெட்டினர். அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கில் மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.