Advertisment

சும்மா இறங்கி குத்தாட்டம் போட்ட திருவள்ளூர் கலெக்டர்... உற்சாமாக களைகட்டிய பொங்கல் விழா- வீடியோ!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தில் ஊழியர்களுடன் நடனமாடி மகிழ்ந்துள்ளார் ஆட்சியர் பிரபு சங்கர்.

author-image
WebDesk
New Update
Tiruvallur collector Prabhu shankar dances during pongal festive celebration video Tamil News

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில், பொங்கல் பண்டிகையானது நாளை மறுநாள் திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

Advertisment

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பாரம்பரிய உடை அணிந்து வந்த ஊழியர்கள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனால் ஆட்சியர் அலுவலகம் திருவிழாக்கோலம் பூண்டது.

மேலும், விழாவில் மேள தாளங்களுக்கு இணங்க ஊழியர்கள் நடனமாடி மகிழ்தனர். அப்போது, மக்களின் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் எதிர்பாராத வகையில் குத்தாடம் போட்டு திரண்டிருந்த அனைவருக்கும் உற்சாகத்தை அளித்தார். இதன்பின்னர் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற ஆட்சியர் உறி அடித்தார். இப்படியாக, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா களை கட்டியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tiruvallur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment