/indian-express-tamil/media/media_files/fdQCUIoFVBSFR7P8qOQY.jpg)
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருகார்த்திகை தீபத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபத் திருவிழா நாளை (நவ.26) நடைபெறுகிறது.
நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இதற்கான பணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, நாளை அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும்.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு சார்பில் இன்று(நவ.25) சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இன்று முதல் நவ.27 வரை 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வேலூர்- திருவண்ணாமலை, திருவாரூர்- திருவண்ணாமலை, தாம்பரம்- திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போல், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, கரூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று முதல் நவ.27 வரை 695 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மக்கள் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் பேருந்து டிக்கெட்டுகளை முன்புதிவு செய்து கொள்ளலாம் என கும்பகோணம் பேருந்து கோட்டம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதில் இருந்தும் 14,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.