Advertisment

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா; என்ன காரணம்?

40 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக உள்ள சண்முகசுந்தரம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை குவித்ததை சட்டத்தின் மூலம் நிரூபிக்க உதவிய வழக்கறிஞராக அறியப்படுகிறார்.

author-image
WebDesk
New Update
Shunmugasundaram.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Advertisment

இந்த முடிவு குறித்து அவர் முதலமைச்சர் மற்றும் அரசு தலைமை அதிகாரிகளிடத்தில் அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு முக்கிய வழக்குகளில் அரசு சார்பில் ஆஜரான அவர் கடந்த 2022-ம் ஆண்டு பணியில் இருந்து விலகுவதாக  தெரிவித்தார். முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தொடர்ந்து பணியில் நீடித்து வந்த சண்முகசுந்தரம் தற்போது ராஜினாமா கடிதத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.

கடந்த 2021-ல் ஸ்டாலின் தலைமையிலானான தி.மு.க ஆட்சி அமைத்தவுடன் அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம்  நியமிக்கப்பட்டார். 1977-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த சண்முகசுந்தரம் தன் தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான எஸ்.ராஜகோபாலிடம் இருந்து கிரிமினல் சட்டத்தில் பயிற்சி பெற்றார். 

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக, மாநில அரசு, சி.பி.ஐ, ரயில்வே சார்பாக பல வழக்குகளில் வாதாடியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரித்த எம்.சி.ஜெயின் விசாரணை ஆணையம் உட்பட பல விசாரணைகளுக்கு சண்முகசுந்தரம் அரசு சார்பாக வாதாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கில் அரசு தரப்பில் அவர் ஆஜராகி இருந்தார். 1996 முதல் 2001 வரையில் தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அவர் செயல்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 

மேலும் , 40 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக உள்ள சண்முகசுந்தரம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை குவித்ததை சட்டத்தின் மூலம்  நிரூபிக்க உதவிய வழக்கறிஞராக அறியப்படுகிறார். அரசு புதிய தலைமை வழக்கறிஞரை விரைவில் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சண்முகசுந்தரம் தனித்த முறையில் வழக்கறிஞராக இயங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamilnadu news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment