சட்டவிரோதா அமைப்பாக பி.எப்.ஐ அமைப்பை மத்திய அரசு அறிவித்த நிலையில் இந்த இயக்கத்தை தமிழகத்தில் தடை செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டத்தின் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது மத்திய அரசு நேற்றைய தினத்தில் 5 ஆண்டுகள் தடை விதித்தது. கடந்த வாரம் நாடு முழுவதிலும் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பச் சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. மேலும் நாடு முழுவதிலும் உள்ள பல நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்றைய தினத்தில் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
மத்திய அரசின் இந்த தடை தொடர்பாக மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதை முன்னிட்டு கேரளத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் பி.எப்.ஐ அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.