சென்னையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "உக்ரைனில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, இன்னும் சில வருடங்களுக்கு மாணவர்கள் அங்கு செல்வது கடினம். சீனா, பிலிபின்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து மாணவர்கள் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.
நாங்களும் இங்கு வருகைதந்திருக்கும் மக்களுடன் எங்கள் அலுவலகத்தில் அச்சொசியாசன் உருவாக்கி இருக்கிறோம்.
அவர்கள் கொடுத்திருக்கிற கருத்துக்களை அமைச்சருக்கு எடுத்து செல்கின்றோம்.
எந்த முதல்வரும் வெளிநாட்டிற்கு செல்வது வரவேற்கத்தக்க விஷயம் தான். அப்போது தான் தமிழ்நாட்டை பற்றி வெளிநாடுகளுக்கு தெரியவரும், நமக்கும் வெளிநாட்டை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
முதல்வர் வெளிநாடு சென்று வந்தவுடன், தமிழ்நாட்டிற்கு ஆக்கபூர்வமாக திட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்பது எங்களுடைய ஆசை.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், உ.பி. அரசு தமிழ்நாட்டிற்கு வந்து ரூ.10,000 கோடிக்கு கையெழுத்து பெற்றிருக்கிறது. தமிழக முதல்வர் வெளிநாட்டிற்கு சென்றிருப்பதால், இதற்கு சமமாக முதலீடு பெறுவாரா என்பதை பார்க்கலாம்", என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil