தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த இரண்டு ஆண்டுகளில், அண்ணாமலை செய்திகளில் பேசப்படாமல் இருந்ததில்லை அடிக்கடி சொந்தக் கட்சியினரை மோசமாக நடத்தி இருக்கிறார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையின் ஆக்ரோஷமான அணுகுமுறை கட்சியின் பார்வையை உறுதி செய்திருந்தாலும், பல பா.ஜ.க தலைவர்கள் இது ஒரு மாநில அரசியலில் சிறந்த உத்தியாக இருக்காது என்று கருதுகின்றனர். மாநிலத்தில் அதிக மேலாதிக்க கூட்டாளிகளுக்கு அதன் இரண்டாவது கட்ட அந்தஸ்தைக் கொடுத்து பல உணர்வுகளை சமநிலைப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்.
சமீபத்தில், அண்ணாமலை வெளியிட்ட நீண்ட சொத்துப் பட்டியல் தொடர்பாக தி.மு.க-விடம் இருந்து ரூ. 500 கோடிக்கான நஷ்ட ஈடு வழக்கை மட்டும் பெறவில்லை, கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க மீதான அவரது விமர்சனங்கள் பா.ஜ.க உடன் உறவை முறித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியது – அ.தி.மு.கமிருந்து கூர்மையான பதிலடியைப் பெற்றுள்ளது.
39 வயதான அண்ணாமலை, ஊடகங்களை கையில் எடுத்துக்கொண்டு, பா.ஜ.க தலைவர்களை தனது புத்திசாலித்தனமான முறையில் தவறான வழியில் குலைத்துள்ளார். கடந்த சில மாதங்களில் பலர் கட்சியை விட்டு வெளியேற வழிவகுத்தார்.
தமிழகத்தில் அவ்வளவாகப் பிரபலமடையாத ஒரு தேசியக் கட்சிக்கு, ஆகஸ்ட் 2014-ல் தமிழிசை சௌந்தரராஜன், பெண் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதைப் போல, அண்ணாமலையை மாநில அரசியலில் இறக்குவது என்பது ஒரு பரிசோதனை நகர்வாக இருந்தது.
பா.ஜ.க-வைச் சேர்ந்த மூத்த மாநில தலைவர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் ஒருமுறை அவரை அனுபவம் இல்லாத தலைவர் என்று விவரித்தார். மற்றொரு தலைவர் அண்ணாமலையின் எழுச்சி ‘ஒரு குன்றில் இருந்து ஒரு மலையை உருவாக்குவது’ என்று கூறினார். காவல்துறையில் பணிபுரிந்த காலம்தான் அவருடைய புகழுக்கான ஒரே உரிமை என்பதை வலியுறுத்தி, அந்த தலைவர் கூறினார்: “தமிழகத்தில் ஒரு தேசியக் கட்சிக்கு தலைமை தாங்குபவர் குறைந்தது பத்தாண்டு காலமாவது தொண்டர்களுடன் களத்தில் பணியாற்றியவராக இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அவர் அப்படி இல்லை, அவர் கர்நாடகாவில் இருந்து பி.எல்.சந்தோஷால் (பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர்) நியமிக்கப்பட்டார்.
அண்ணாமலையுடன் நட்பாகப் பழகாத மற்றொரு நிர்வாகி, மாநிலத் தலைமையை அடிக்கடி மாற்றுவதால் கட்சி பாதிக்கப்படுவதாகக் கூறினார்.
தமிழ்நாட்டின் உயர்மட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் கூறியதாவது: அண்ணாமலை உற்சாகமாக இருந்தாலும், பிரச்சினைகளைப் பற்றிய அவரது அறியாமை மற்றும் முதிர்ச்சியற்ற நடத்தை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. மூத்த பத்திரிக்கையாளர்களை கோவில்களுக்கோ, தேவாலயங்களுக்கோ செல்கிறீர்களா என்று அவர் கேள்வி கேட்பது, அவர்களது வாழ்க்கைத் துணைவர்களின் மதம் குறித்து விசாரிப்பது போன்றவை நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறோம்.” என்று கூறினார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன், அண்ணாமலை ஒரு புதிய அரசியலைப் பிரதிபலிப்பதாகக் கூறினார் “நாம் ஊடகங்களைச் சரியாக நிர்வகித்தால் மக்களை நிர்வகிக்க முடியும். ஆனால், மக்கள்தான் ஊடகங்கள் என்று தவறாகப் புரிந்துகொண்டால் அது முட்டாள்தனம்.” என்று கூறினார்.
மேலும், “அவருடைய முன்னாள் ஐ.பி.எஸ் பதவி அடையாளம், மற்றும் அவருடைய வயது ஆகியவற்றின சுவாரசியமான கலவையால் அண்ணாமலை ஒரு விற்பனைப் பொருளாக இருக்கலாம், ஆனால், அதன் காரணமாக அவரை முக்கிய எதிர்க்கட்சியாகப் பார்ப்பது தவறு என்று அவர் கூறினார். மத்திய பா.ஜ.க அரசுதான் தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது.” என்று கூறினார்.
அ.தி.மு.க கூட்டணியில் இருந்து பிரிந்து செல்வதற்கான அண்ணாமலை வலியுறுத்துவதன் பின்னணி என்ன என்பது குறித்து பா.ஜ.க மாநில பிரிவுக்கும் உறுதியாக தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி ஊழல் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக சாடிய அண்ணாமலை, இதை சகித்துக்கொள்வதற்காக தான் அரசியலில் சேரவில்லை என்றும், அ.தி.மு.க உடனான உறவை பா.ஜ.க துண்டிக்கவில்லை என்றால் ராஜினாமா செய்வதாகவும் மிரட்டினார்.
ஆனால், 2024 லோக்சபா தேர்தலில் தென் மாநிலங்களில் இருந்து முடிந்தவரை அதிக எம்.பி.க்களை பெற வேண்டும் என்ற பா.ஜ.க-வின் நம்பிக்கையை கருத்தில் கொண்டு, அ.தி.மு.க.வை தூக்கி எறிவது பா.ஜ.க-வின் திட்டங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளது – குறிப்பாக ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு இறந்த பின், கூட்டணியில் பா.ஜ.க செலவழித்த நேரத்தையும் முயற்சியையும் பார்க்கும்போது கூட்டணியை முறித்துக்கொள்ள வாய்ப்பு இல்லை.
அண்ணாமலைக்கு இந்தளவுக்கு சுதந்திரமாக செயல்பட பா.ஜ.க தலைமை ஏன் அனுமதிக்கிறது என்று பா.ஜ.க-வின் பல மூத்த தலைவர்கள் குழப்பத்தில் இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். “வேறு எந்த தலைவனாக இருந்திருந்தால், அவர் இப்போது டெல்லிக்கு வரவழைக்கப்பட்டிருப்பார்” என்று ஒரு மாவட்ட தலைவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“