/tamil-ie/media/media_files/uploads/2022/11/Annamalai-1.jpg)
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவுடன் அக்கட்சியின் கூட்டணி அப்படியே உள்ளது என்றும், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அந்தக் கட்சியே கூட்டணியை வழிநடத்தும் என்றும் கூறினார். அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி 2024 தேர்தலில் தங்கள் கட்சி மெகா கூட்டணி அமைக்கும் என்று கூறிய ஒரு நாள் கழித்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் இந்த கருத்து வந்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் அ.தி.மு.க மிகப்பெரிய மற்றும் வலுவான கட்சி என்றும், அண்ணன் எடப்பாடியின் கருத்துகளில் தவறில்லை என்றும் கூறினார்.
மேலும், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கூட்டணி குறித்து எந்த குழப்பமும் இல்லை. 2021 மற்றும் 2019 தேர்தல்களில் அ.தி.மு.க ஆட்சியில்தான் கூட்டணி அமைத்தோம். இன்று அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ளோம், கூட்டணியின் வடிவம் குறித்து பா.ஜ.க நாடாளுமன்றக் குழு முடிவு செய்யும்” என்று அண்ணாமலை கூறினார்.
“திமுகவின் தீய சக்தியை தோற்கடிக்க எந்த மெகா கூட்டணியையும் ஏற்க தயார் என்று அ.தி.மு.க கிளர்ச்சித் தலைவர் டி.டி.வி தினகரன் கூறியது குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, கூட்டணியில் புதிதாக சேருபவர்களை பா.ஜ.க நாடாளுமன்றக் குழு முடிவு செய்யும் என்றும், அதில் தனக்கு எந்த கருத்தும் இல்லை என்றும் கூறினார்.
2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.